மதுரையில் தனியார் பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், கீழே நின்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் பிளஸ் 1 படித்து வரும் வீரக்குமார், சக்திவேல், குமாரவேல் என 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.