தற்போதைய செய்திகள்

மதுரையில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவர்கள் காயம்

DIN


மதுரையில் தனியார் பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், கீழே நின்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். 

 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான பள்ளியின் பால்கனி தடுப்புச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. 

இந்த விபத்தில் பிளஸ் 1 படித்து வரும் வீரக்குமார், சக்திவேல், குமாரவேல் என 3 மாணவர்கள் காயமடைந்தனர்.  

இதையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT