தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 2,299; பலி 8 ஆக உயர்வு

சிங்கப்பூரில்  சனிக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது.

DIN

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90 வயதுடைய முதியவர் ஒருவர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சிங்கப்பூரில் முழு வீச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சிங்கப்பூரில் சனிக்கிழமை ஒரே நாளில் 191 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 90 வயது முதியவர் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி 32 வயது இந்தியா் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். அவா் கரோனாவால் உயிரிழக்கவில்லை; இதயப் பிரச்னை காரணமாவே உயிரிழந்தாா் என்பது உடல்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. விமானப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என அந்நாட்டு அரசு கூறியிருந்தது நினைவில்கொள்ளத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT