முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,065 பேர் பலி; பலி எண்ணிக்கை 54,265-ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:


அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளனர். 

உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்துள்ள உயிர்க்கொல்லி நோய்த்தொற்றான கரோனாவுக்கு இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், இன்றளவும் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். கரோனாவுக்கு வல்லரசு நாடான அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்பும், பலியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

இந்நிலையில், அமெரிக்காவில் நோய்த்தொற்றால் சனிக்கிழமை ஒரே நாளில் 2,065 பேர் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 54,265 -ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 30,570 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்து 896 -ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தோற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,18,162 -ஆக அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →