இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050; பலி 1,074-ஆக உயர்வு
இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 33,050 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
புது தில்லி: இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 33,050 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:
வியாழக்கிழமை காலை 9 வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,718 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 67 போ் உயிரிழந்துவிட்டனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 23,651 ஆக உள்ளது. 8,325 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். ஒருவா் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 9,915 பேரும், குஜராத்தில் 4,082 பேரும், தில்லியில் 3,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.