இந்தூரில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 1,485 -ஆக உயர்வு
இந்தூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,485 -ஆக உயர்ந்துள்ளது.
இந்தூர்: இந்தூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,485 -ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் கரோனா நோய்த்தொற்றால் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 19 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,485-ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்றால் மூன்று பேர் புதிதாக இறந்துள்ளனர் என்று இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் பிரவீன் ஜாடியா உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் இதுவரை மொத்தம் 2,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 130 பேர் பலியாகியுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.