கோவை: கோவையில் கரோனா பாதிப்புக்கு பிரபல நரம்பியல் மருத்துவர் சனிக்கிழமை பலியானார்.
கோவை, காந்திபுரத்தை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் எம்.பிரணேஷ் (வயது 83). கோவை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். இது தவிர காந்திபுரம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். இங்கு மேற்கொண்ட பரிசோதனையில் இவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு முதல் முறையாக ஒரு மருத்துவர் உயிரிழந்தது மற்ற மருத்துவர்கள், பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.