தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் புதிய உச்சம்: ஒரே நாளில் 200 பேருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 200 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 3,806 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட தகவல்:
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 886 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 161 பேர்,  காரைக்காலில் 7 பேர், ஏனாம் பகுதியில் 32 பேர் என மொத்தம் 200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து,  இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3,806 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 28 பேர் ஜிப்மரிலும், 91 பேர் கொவைட் கேர் சென்டரிலும், 3 பேர் காரைக்காலிலும், 32 பேர் ஏனாம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 

இதனிடையே பங்கூரை சேர்ந் 65 வயது ஆண் சிகிச்சையின்றி உரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 1,445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 111 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,869 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT