முகப்பு
தற்போதைய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜய்யா கரோனாவால் பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, எளிமைக்கு பெயர் பெற்ற சுன்னம் ராஜய்யா (வயது 62) கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜய்யா கரோனாவால் பலி
பகிர்:

ஹைதராபாத், ஆகஸ்ட் 4: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தெலுங்கானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, எளிமைக்கு பெயர் பெற்ற சுன்னம் ராஜய்யா (வயது 62) கரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பத்ராச்சலம் தொகுதியில் மூன்று முறை (1999, 2004 மற்றும் 2014) சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

இவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜயவாடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜய்யாவின் மறைவுக்கு தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.