தற்போதைய செய்திகள்

முலாயம் சிங் உடல்நிலை சீராக உள்ளது -மருத்துவமனை

PTI

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்  முலாயம் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் முலாயம் சிங் யாதவ் (வயது 80). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுநீர் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மேதாந்தா மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் கபூர் கூறுகையில், 

முலாயமின் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என தெரியவந்தது. மற்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் சீராக உள்ளது. 

மேலும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

கிா்கிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் மாணவா்கள் குறிவைக்கப்படுவது ஏன்?

புரியில் மோடி பேரணி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

11 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மே.வங்கம் முதலிடம்!

SCROLL FOR NEXT