தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் புதிதாக 988 பேருக்கு கரோனா: 20 பேர் பலி

DIN

பஞ்சாபில் புதிதாக 988 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பஞ்சாபிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இது தொடர்பாக பஞ்சாப் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 988 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 24,889-ஆக அதிகரித்துள்ளது. 8,550 பேர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 15,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,81,321 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 604-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT