முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாம் காவல்துறை இயக்குனருக்கு கரோனா உறுதி

அசாம் மாநில காவல்துறை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தாவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
அசாம் காவல்துறை இயக்குனருக்கு கரோனா உறுதி
பகிர்:

அசாம் மாநில காவல்துறை இயக்குனர் பாஸ்கர் ஜோதி மஹந்தாவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.

இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தொற்று உறுதியானதை அடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் விரைவில் சோதனை செய்யப்படும்.

மேலும் அசாம் மாநில காவல்துறை தலைமையகத்தில் 30 காவல்துறை அதிகாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் டிஐஜி (ஆட்சி) ஆகியோரும் அடங்குவர் என தெரிவித்தார்.

இது குறித்து காவல் துறை துணைத் தலைவர் ஜி.பி.சிங் வெளிட்ட சுட்டுரையில், அசாம் காவல் துறையில் இதுவரை 2,259 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,734 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.