சுதந்திர தின விழா: நாகையில் ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்
நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா நாகை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நாகப்பட்டினம்: நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா நாகை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 120 பேருக்குப் பாராட்டுச் சான்றுகளையும், அரசுத் துறைகள் சார்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.95.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
கரோனா தனிமைப்படுத்தும் முகாமுக்கு இடவசதி அளித்த 4 பேர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எஸ்.எஸ். பிரசாந்த், மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் எஸ். கலாநிதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.