முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரம் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தலையில் சுட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை
பகிர்:

விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தலையில் சுட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 25). இவர் ஆயுதப்படைக் காவலராக 2017-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை தனது குடியிருப்பில் பாதுகாப்புப் பணிக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை (303 வகை துப்பாக்கி) பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை

Advertisement

நிகழ்விடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments