13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!
13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டது குறித்து...
ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தில், 13 வயது சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதன் காரணமாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (ஏப். 04) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உடலில் சந்தேகத்திற்கிடமான உடல் மாற்றங்களை அவளது பெற்றோர் கவனித்த பிறகு, குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்யப்பட்டு, 35 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவான் காவலதிகாரி ஜெய்பிரகாஷ் குமார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
Advertisement
விசாரணை மேற்கொண்டபோது, அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார்" எனத் தெரிவித்தார்.