முகப்பு
தற்போதைய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா: முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு வணங்கின

முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் யானைகள் மணியாத்து, பூஜை செய்து மண்டியிட்டு வணங்கின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் யானைகள் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு வணங்கின.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் குட்டியானைகள் அங்குள்ள விநாயகர் கோவிலில் மணியாட்டி, பூஜை செய்து மண்டியிட்டு விநாயகரை வணங்கின. 

பூஜையைத் தொடர்ந்து முகாமில் யானைகள் அணிவகுத்து நின்றன. யானைகளுக்கு இனிப்பு மற்றும் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி. துணை கள இயக்குநர் செண்பகப் பிரியா மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →