தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி பலி
தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தெலுங்கானாவின் ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஜக்தியல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.தட்சிணா மூர்த்தி (வயது 58). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது பணிக்காலம் இந்த மாத இறுதியோடு முடியவுள்ளது குறிப்பிடத்தக்கது.