கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

‘புரெவி’ புயல் உருவானது

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக செவ்வாய்க்கிழமை உருவானது.

DIN

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'புரெவி' புயலாக செவ்வாய்க்கிழமை உருவானது.

வங்கக் கடலில் நேற்று நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கி.மீ தொலைவில் நிலைகொண்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை புயலாக வலுப்பெற்று, இலங்கையின் திருக்கோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகரும் புயல் நாளை மாலை இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும்.

பின், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை பாம்பன் - குமரி அருகே தென்கிழக்கு கடற்கரையில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT