தமிழகத்தில் மேலும் 1,404 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,404 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,83,319 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 380 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இன்றைய அறிவிப்பிலும் 10 பேர் நோய்த் தொற்றால் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,722 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,60,617 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 10,980 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 64,588 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.