தமிழகத்தில் மேலும் 1,312 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,312 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM
தமிழகத்தில் புதிதாக 1,312 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,91,552 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 307 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
இன்றைய அறிவிப்பிலும் 16 பேர் நோய்த் தொற்றால் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,69,048 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 10,695 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.