சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் 
தற்போதைய செய்திகள்

‘விவசாயிகளுக்கு எதிராக போராட அரசு தயாராகிவிட்டது’: சுக்பீர் சிங்

விவசாயிகளுக்கு எதிராக போராட மத்திய அரசு தயாராகிவிட்டது என சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

ANI

விவசாயிகளுக்கு எதிராக போராட மத்திய அரசு தயாராகிவிட்டது என சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாக விவசாய  சங்கத்தினர்  அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சுக்பீர் சிங்,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கூடாது என்ற மத்திய அரசின் நிலைபாட்டை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக அவர்கள் போராட முடிவு செய்துவிட்டார்கள் என்பது இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு நிரூபிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதற்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியதோடு, மத்திய அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி விவரம்!

பாடம் கற்காத கிரிக்கெட் ஆஸ்திரேலியா..! டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

SCROLL FOR NEXT