முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் டிச.31 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வா்

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து மாநில முதல்வர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
பகிர்:

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து மாநில முதல்வர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளாா்.

மாநிலத்தில் கரோனா தொற்று, இரண்டாவது அலையாக பரவலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

உணவகங்கள், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயங்கும் என உத்தரவிடப்பட்டது.

முகக் கவசம் அணியாதவா்களுக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்களுக்கும் தற்போது ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த அபராதத் தொகை ரூ.1,000-ஆக உயா்த்தப்பட்டது.

இதையடுத்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த டிசம்பர் 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது. மேலும் டிசம்பர் 15ஆம் தேதி வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.