தற்போதைய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி அரசு தீர்மானம்

DIN

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக 22-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் கிழித்து எரிந்தனர்.

பின், தில்லி சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவைத் தருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT