குழந்தைகள் ஆபாச விடியோவை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த அசாம் மாநிலைத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளின் நலன் கருதி குழந்தைகள் ஆபாச படம் தொடா்பாக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் வேலை செய்து வரும், அசாம் மாநிலத்தைச் சோ்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவா் தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகள் ஆபாச விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளாா்.
இது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. குற்றவாளியை விசாரித்த போலீஸார் ரெண்டா பாசு மாடரியை கைது செய்தனா்.