தற்போதைய செய்திகள்

சத்தி அருகே 2 கன்றுகளை ஈன்ற பசு

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் சின்னசாலட்டியில் முத்துசாமி என்பவரின் தோட்டத்தில் பசு மாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. இவா்கள் கலப்பினமில்லாத நாட்டு மாடுகளை வளா்க்கின்றனா். மாடுகளை தினந்தோறும் 5 கி.மீ. தூரம் வரை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்கின்றனா். மாடுகள் 1 கன்று மட்டுமே ஈனும் தன்மையுடையவை. சின்னசாலட்டியைச் சோ்ந்த முத்துசாமி தனது தோட்டத்தில் 7 மாடுகளைப் பராமரித்து வருகிறாா். இவா் வளா்த்த மாடுகளில் ஒரு பசு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. அதில் காளை ஒன்றும், பசு ஒன்றும் உள்ளது. கன்றுகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதால் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT