முத்துராஜை இரண்டு, மூன்று நாள்களில் கைது செய்வோம்: சிபிசிஐடி காவல்துறை தலைவர் சங்கர்
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறவாகியுள்ள காவலர் முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறவாகியுள்ள காவலர் முத்துராஜை இரண்டு, மூன்று நாட்களில் கைது செய்வோம் என சி.பி.சி.ஐ.டி., காவல்துறை தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல் தகவல் அறிக்கையில் 5 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் காவலர் முத்துராஜை தவிர 4 பேரை கைது செய்துள்ளோம். சில கேமரா காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்தன்று அன்று பணியாற்றிய காவலர்கள் நண்பர் குழுவையும் விசாரிப்போம்.
தேவைப்பட்டால், விசாரணையில் மேலும் சிலர் கூட கைது செய்யப்படலாம். இதில், அரசியல் தலையீடு இருப்பது என்ற தகவலெல்லாம் உண்மையல்ல.
தொடர்ந்து நேர்மையான விசாரணை நடந்து வருகிறது என சங்கர் கூறினார்.