திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்க குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டது.
தற்போது பொது முடக்கம் காரணமாக காவிரி ஆற்றிலிருந்து மூன்று மூன்று பேராக சென்று வெள்ளிக் குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு அதன் பின்னர் தங்க குடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஆண்டாள் யானை மீது வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஒரு தங்க குடம் மற்றும் 27 வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது அதன் பின்னர் திரு ஆபரணங்கள் பழுது நீக்கப்பட்டது.
நாளை சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.