தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம்! 

DIN


திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தங்க குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டது.

தற்போது பொது முடக்கம் காரணமாக காவிரி ஆற்றிலிருந்து மூன்று மூன்று பேராக சென்று வெள்ளிக் குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு அதன் பின்னர் தங்க குடத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு ஆண்டாள் யானை மீது வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க மூலவர் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ஒரு தங்க குடம் மற்றும் 27 வெள்ளி குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது அதன் பின்னர் திரு ஆபரணங்கள் பழுது நீக்கப்பட்டது.

நாளை சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர்  ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT