தற்போதைய செய்திகள்

கரோனா: மதுரை அரசு மருத்துமனையில் தலைமைக் காவலர் பலி

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தலைமை காவலர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே கலங்கபேரியைச் சேர்ந்த வைரவன் என்பவரது மகன் அய்யனார் (40). இவர் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த(ஜூலை) 2ம் தேதி மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இவர் இரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். பின்னர் பரிசோதனையில் இவருக்கு கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இவர் பணிபுரிந்த சேத்தூர் ஊரக காவல் நிலையம் மூடப்பட்டது. அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT