தற்போதைய செய்திகள்

களக்காட்டில் கரோனாவுக்கு நகைக்கடை அதிபர் பலி 

DIN


களக்காடு: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்தார். 

களக்காட்டைச் சேர்ந்த 65 வயதுடைய நகைக்கடை அதிபர் கடந்த 1 வாரத்திற்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியிருந்தது.

1 வாரம் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார். அவரது உடல் திருநெல்வேலியில் அடக்கம் செய்யப்பட்டது. 

களக்காட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் நகைக்கடை அதிபர் இறந்துள்ளதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT