முகப்பு
தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலை பகுதி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலை பகுதி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் பெய்து வரும் தொடர்மழையால் அங்குள்ள கல்படை, பொட்டியம், மல்லிகைபாடி ஆகிய ஆறுகளில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் இன்று காலை பொட்டியம் ஆற்றில் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காயத்திரி(வயது 14), பத்மசரன்(12) ஆகியோர் குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென  தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மூழ்கிய சிறுவர்களின் உடலை மீட்கும் பணியில்  காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.