தற்போதைய செய்திகள்

குமரி முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றம்

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் வாழை விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை தொடங்கி கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் 15 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமாக எழுந்தன. 

அலைகள் வேகத்துடன் கரைப்பகுதியை வந்தடைவதால் இங்கு நடைபெற்று வரும் படித்துறை அமைத்தல், கடற்கரை சீரமைப்பு உள்ளிட்ட சுற்றுலாப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT