தற்போதைய செய்திகள்

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு:  உடைப்பை சரி செய்யும் முயற்சியில் விவசாயிகள் 

DIN

அறந்தாங்கி அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு அடைப்பை சரி செய்ய விவசாயிகள் முயற்சி கொண்டுள்ளனர்.

மேட்டுரில் இருந்து கடந்த 12-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்துவிட்டார். கல்லணையில் இருந்து 16 -ஆம் தேதி திறந்து விடப்பட்ட காவிரி நீர் சனிக்கிழமை அறந்தாங்கி கடைமடை பகுதியான மேற்பனைக் காட்டிற்கு வந்தது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வேம்பங்குடி அருகே பெரிய உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வயல் வெளியில் காவிரி நீர் வீணாக வெளியேறி வருகிறது. அடைப்பை சரி செய்ய ஜே.சி.பி. உதவியுடன் சவுக்கு கம்புகளை குறுக்கே கட்டி மணல் வைத்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கரைகளை பலப்படுத்தாததே உடைப்புக்கு காரணம் என்றும் இது குறித்து அதிகாரிகள் அலட்சியமாக இருந்தாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இதே போன்ற சம்பவம் காரணமாக 3000 கன அடி நீர் குறைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT