திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி வயர்லெஸ் ரோடு காமராஜர் நகரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர்களை தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
இன்று காலை முதல் தொடர்புடைய பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டனர். அங்கு மையம் அமைப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.