தற்போதைய செய்திகள்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 25,04,588; பலி 126,780 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,04,588 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,26,780 -ஆகவும் உயர்ந்துள்ளது. 

DIN


அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,04,588 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,26,780 -ஆகவும் உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் சுமாா் நேற்று ஓரே நாளில் 37,907 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பதிவு செய்யப்பட்டது. இது, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். அமெரிக்காவின் கரோனா பரவல் மையமான நியூயாா்க்கில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாலேயே நாட்டில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அமெரிக்காவில் 25,04,588 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அந்த நோய்க்கு ஒரே நாளில் 597 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,26,780 -ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 10,52,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT