தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி சாவு

DIN


விருதுநகர்: விருதுநகர் அருகே சொக்கலிங்கபுரத்தில் பட்டாசு ஆலையில் திங்கட்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் முதலிப்பட்டி சாலையில் சொக்கலிங்கபுரத்தில் நவரத்தின பட்டாசு ஆலை உள்ளது. சிவகாசி மோகன் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை பட்டாசு ஆலைக்கு 3 தொழிலாளர்கள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.   அப்போது ஃபேன்சி ராகவ் அடியில் மணி மருந்து கலவையை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எதிர்பாராதவிதமாக உராய்வு காரணமாக மருந்து கலவை வெடித்ததில் ஒரு அறை முற்றிலும் சேதமடைந்தது. 

மேலும் இந்த விபத்தில் சாத்தூர் சிவந்திப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். 

பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT