நாகர்கோவில்: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உபகரணங்கள் வாங்கவும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் ரூ.1 கோடி நிதியை மருத்துவக்கல்லூரி முதல்வர் சுகந்திரா குமாரியிடம் வழங்கினார்.