கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சமூக அயல் நிறுத்த ஏற்பாடுகளுடன் 3 அடி இடைவெளியுடன் கூடிய காய்கறி விற்பனை இன்று தொடங்கியது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனர்.
இருப்பினும் வழக்கத்தை விட அனைத்து காய்கறிகளும் மூன்று மடங்கு விலை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.