தற்போதைய செய்திகள்

பிகார் சாலை விபத்தில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

DIN

சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

பிகார் மாநிலம் முசாபர்பூரிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கதிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சமஸ்திபூர் மாவட்டம் சாந்த்சேரில் உள்ள ஷங்கர் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT