தற்போதைய செய்திகள்

புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா எளிமையாக  நடைபெற்றது 

DIN

குடியாத்தம்: புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா 10 பேருடன் 2 மணி நேரத்தில் ஆகம விதிப்படி மிக எளிமையாக  நடைபெற்றது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம், குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில் உள்ளது இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்

அப்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வெகு விமர்சையாக நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா இந்த ஆண்டு உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் அனைத்து மத விழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்

ஆகம விதிப்படி சிரசு திருவிழாவை நடத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதியளித்தார் இதனையடுத்து வைகாசி 1 ம் நாளான  வியாழக்கிழமை நள்ளிரவில் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  ஆகியோரின் தலைமையில் 10 பேருடன் 2 மணி நேரத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆகம விதிப்படி மிக எளிமையாக  நடைபெற்றது 

பல நூறு ஆண்டுகளாக பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கெங்கையம்மன் சிரசு திருவிழா பல குடைகளுடன் கம்பீரமாக வீதி உலா வரும் சிரசு வியாழக்கிழமை ஒரு குடையுடன் 10 நபர்களுடன் நடைபெற்றது. பக்தர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மனைக் காண ஊர் பொதுமக்கள் கோவில் அருகே கூடுவதால் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT