ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் அறச்சலூர் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை காலை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி உணவுப்பொருள்களை வழங்கினார்.
அறச்சலூர் பேரூராட்சியில் உள்ள 500- க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.
இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம், மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, ஓன்றிய செயலாளர் சு.குணசேகரன், பேரூர் செயலாளர்கள் சாமியப்பன், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.