தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கண்டன முழக்க போராட்டம்

DIN

திருவாரூர்: அரசுப்பணியில் உள்ளவர்களின் வயது வரம்பை 59 -ஆக உயர்த்தியதை திரும்பபெற வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் திருவாரூரில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசுப்பணியாளர்களின் வயது வரம்பு 58-இல் இருந்து 59 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சிறப்பு வகுப்பு நடத்திய பிறகு தேர்வை நடத்த வேண்டும்,  வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாப்புடன் இலவசமாக அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திட வேண்டும், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் தலைமையிலும் மாவட்ட தலைவர் சு.பாலசுப்ரமணியன் முன்னிலையிலும் கண்ட முழக்க போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT