‘எல்லையோர மக்கள் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்’: அமித் ஷா
எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பேசினார்.
எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை பேசினார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 'விகாசோத்ஸவா 2020' என்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் பேசியதாவது,
"இந்த 'விகாசோத்ஸவ' திட்டத்தின் நோக்கம், எல்லை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு மற்ற கிராமங்களுக்கு இணையான வசதிகளை வழங்குவதாகும். எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.” என கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு கச், பனஸ்கந்தா மற்றும் படான் ஆகிய மூன்று எல்லையோர மாவட்டங்களின் கிராமத் தலைவர்களுடன் உரையாடினார்.