கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பட்ஜெட் 2021-22: ஆலோசனை வழங்க மக்களுக்கு அழைப்பு

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22 தொடர்பான ஆலோசனை வழங்க மக்களுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

DIN

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22 தொடர்பான ஆலோசனை வழங்க மக்களுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆண்டுதோறும் பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருகின்றது. இந்நிலையில், கரோனா தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்த நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளனர்.

இதன்மூலம், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கை 2021-22 குறித்த பொதுமக்களின் கருத்தை mygov.in மூலம் நவம்பர் 15 முதல் நவம்பார் 30 வரை தெரிவிக்கலாம்.

மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அமைச்சக அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என நிதியாமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT