முகப்பு
தற்போதைய செய்திகள்

நாசிக்கில் 2 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

Updated On : 2 அக்டோபர், 2020 at 3:46 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:59 PM

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

நாசிக் மாவட்டம் மாலேகான் தாலுகாவில் உள்ள தியோகட் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பயிர்கள் நாசாமானதால் ஜாலேந்திர பவிஸ்கர் (36) என்ற விவசாயி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு சம்பவத்தில், சின்னார் தாலுகாவில் கடன் பிரச்னையால் கிருஷ்ணா சனப் (55) என்ற விவசாயி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.