தற்போதைய செய்திகள்

அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

DIN

அவிநாசி: அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை மாலை திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவிநாசி வட்டத்திற்கு உள்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கத்தையும் பொருட்படுத்தாமல், சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல, அலுவலகம் திறக்கப்பட்டு, பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் மாலை 5 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தட்சணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்தனர். தொடர்ந்து அலுவலகப் பதிவேடுகள், கணக்கில் வாரா பணம் உள்ளிட்டவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் 3 முறை லஞ்ச ஒழிப்புத் துறை காவலதுறையினர் ஆய்வு மேற்கொண்டு 2 சார்பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகப் பகுதி வழக்கம் போல பரபரப்பாகக் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT