பஞ்சாபில் அரசு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 9 பள்ளிகளின் உரிமங்களை மாநில கல்வித்துறை வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா கூறுகையில், எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு, கரோனா பேரிடர் காலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் தரவில்லை என பல புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், நிறுவனங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளிக்கு சரியான பதில் வராததால் பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்யப்படுவதாக விஜய் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் அமரீந்தர் சிங்கின் அரசில் இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.