விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம் என பஞ்சாப் முதல்வரை கேட்டுக் கொள்வதாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலா கூறியுள்ளார்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டபேரவையில் கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து விமர்சித்து துஷ்யந்த் கூறுகையில்,
விவசாயிகளை ஏமாற்ற வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வரை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர்கள் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால், விவசாயிகளால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களுக்கு அந்த சட்டங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும், அவை சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விற்கப்படுகின்றன என விமர்சித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை ஆளுநரிடம் நேரில் சென்று முதல்வர் அளித்தது குறிப்பிடத்தக்கது.