கர்நாடகத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று பெங்களூரில் பெய்த கனமழையால் நகரில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் தெலங்கானா, ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு பலர் பலியாகினார்கள்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் லேசான மழை பெய்து வந்த நிலையில், இன்று பெங்களூரில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.