ஒடிசாவில் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் கைது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஒடிசாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்ஒடிசாவில் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் கைது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஒடிசாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஒடிசாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் கட்டாக் மாவட்டம் குசும்பி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது நபர் பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியை விமர்ச்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து உத்தரபிரதேசத்தின் சிங்காபலி காவல் நிலையத்தில் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின், சிங்காபலி காவல் நிலையத்தின் காவலர்கள் குழு ஒடிசாவிற்கு சென்று உள்ளூர் காவலர்களின் உதவியுடன் வியாழக்கிழமை அவரைக் கைது செய்தனர். மேலும், அவரைக் காவலில் எடுத்து உ.பி. மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.