ஹோர்முஸ் நீரிணை மூடல்: அதிரடி காட்டும் ஈரான்!
எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடல்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரினையைக் கடந்து செல்லப்படும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும், தீக்கரையாக்கப்படும் என்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
Advertisement
Advertisement
சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய ட்ரோன்களை சவூதி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்புக் கருதி, அந்த நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மோதல் போக்கினால், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள இந்த ஜலசந்தி, உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கியமானதாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் அரேபிய கடலுடனும் இணைக்கிறது. ஹோர்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமன் எல்லையாக இருந்தாலும், இது ஒரு சர்வதேச கப்பல் வழித்தடமாகவுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது.
இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 7.4 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 71.97 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7.7 சதவீதம் அதிகரித்து, 78.46 டாலராகவும் வர்த்தகமானது.
Iran has announced that it will close the Strait of Hormuz, the world's main oil transportation route, due to the war situation in the Middle East.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.