தற்போதைய செய்திகள்

போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து: அரசு மருத்துவமனை ஊழியர் பலி

DIN

போடி: போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் அரசு மருத்துமனை ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெரியகுளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). இவர் போடி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திங்கள் கிழமை இரவு பணி முடித்து பெரியகுளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போடி தேனி நெடுஞ்சாலையில் சாலைக் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடியை சேர்ந்த சரவணக்குமார் (43) பலத்த காயமடைந்தார். அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT